1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மட்டக்களப்பு பதுளை வீதி மரப்பாலம் பஸ்தரிப்பு நிலையத்தின் அவல நிலை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆறு மாத காலமாக இவ்வாறான நிலையில் தான் பேருந்து தரிப்பிடம் காட்சியளிக்கின்றது என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட கிராமவாசிகள் அனைவருமே தினந்தோரும் இந்த பஸ்தரிப்பு நிலையத்தையே பயன்படுத்துகின்றனர்.

பாம்புகளும்,பூரான்வகைகளும் புத்துக்குள் புகுந்து இருக்கலாம் எனவும் பாடசாலைக்கு செல்லும் சிறிய பிள்ளைகள் முதல் முதியோர் வரை இந்த பேருந்து தரிப்பு நிலையத்தில் இருக்கும் போது எதுவும் நடக்கலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தவிடயத்தை கவனத்தில் எடுத்து சமூகம் சார் தொண்டர்கள்,பிரதேசபை உறுப்பினர்கள் இதற்குரிய தீர்வை பெற்றுத்தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி