பிள்ளையான் "மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரா" அல்லது "மாவட்ட அழிவுக் குழுத் தலைவராக" நியமிக்கப்பட்டாரா என்று எனக்கு சில நேரங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. என்று இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி எனும் மாயை மூலமாக இடம்பெற்று வரும் ஆக்கிரமிப்புகளை பார்க்கும் போது இவ்வாறு தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அப்பால் இலங்கையின் முதன்மை மாநகர சபையாக இருந்த மட்டு மாநகர சபையை தற்போது இருக்கும் ஆணையாளர் மூலமாக பல ஏற்றுக் கொள்ளாத விடயங்களை மறைமுகமாக செய்வது இது எல்லாம் அழிவுக்கான காரணமாக உள்ளது.
மண் மாபியாக்களின் அட்டகாசம் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கமுடியாத தலைமைத்துவம் , வாழைச்சேனை பிரதேசசபை அடாவடி என இன்னும் பலவற்றை பட்டியலிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.