ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ இன்று (16) என்னைஅழைத்து அவதூறாகவும் ஆபாசமாகவும் திட்டினார் என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்ததாகவும், அவருக்கு அரசியல் அறிவு இல்லாததால், நேற்றைய ஊடக சந்திப்பு பற்றி ஜனாதிபதி மரியாதைக்கு புறம்பாக பேசியதாகவும் தான் அவருக்கு மிகுந்த மரியாதையுடன் பதிலளித்ததாகவும், விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ள தன்னைத் தொடர்புகொள்வார் என்று நினைத்ததாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தான் எதிர்பார்த்த அளவைக் கடந்து எதிர்பாராத விதத்தில் தன்னுடன் உரையாடியதாக கூறிய அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி இந்த விதத்தில் நடந்து கொண்டால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எனக்கு சந்தேகமாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், எனது குடும்பத்தினர் இதனால் அஞ்சுவதாகவும் கூறினார்.
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக நேற்று நாரஹேன்பிட்ட அபயராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ராஜபக்ஷர்களைக் கடுமையாக விமர்சித்தார்.அங்கு பசில் ராஜபக்ஷ கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி நேற்று (15) மாலை முருத்தெட்டுவே ஆனந்த தேரரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விஜேதாச ராஜபக்ஷவை குற்றம் சாட்டினார்.