முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளின் மழை மற்றும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதுகளையுடைய விவசாயிகளே உயிரிழந்துள்ளனர்.