மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தினரை இலங்கையில் இருந்து வெளியேறக் கோரி உண்ணா நோம்பிருந்து உயிர் நீர்த்த தியாக தீபம் அன்னை பூபதியின் 33 வது நினைவு தினம் இன்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அனுஸ்ட்டிக்கப்ட்டது.
நேற்றய தினம் அன்னை பூபதியின் நினைவு தினத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவரது மகள் தெரிவித்திருந்தார்.
இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மாநகர சபை முதல்வர் தி. சரவனபவன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அன்னை பூபதி 1988.03.19 திகதி முதல் 1988.04.19 வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.