இரண்டு வருடங்களுக்கு முன் தாக்குதலில் முற்றாக சேதமடைந்து 31 உயிர்களை காவு கொண்ட சியோன் தேவாலய ஆராதனை இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.
சியோன் தேவாலய போதகர் மகேஸ் ரொஸன் தலைமையில் இடம்பெற்ற ஆராதனையின் போது பலர் கலந்து கொண்டதுடன் ஆராதனை ஒப்பு கொடுக்கப்பட்டது.
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவுகளும் மன வேதனையுடன் கலந்து கொண்டிருந்தனர்.