மாலியில் (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிக்கு தயாரான 243 பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் புதிய அமைதிகாக்கும் குழுவினர், (21) அதிகாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் ,இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், விமான நிலையத்திற்கு சென்று அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர்களை வழியனுப்பிவைத்தார்.
இக்குழுவில் 12 படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை உள்ளடங்காக 212 பேர் அடங்குவர்.