இன்று அதிகாலை 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர். இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்விலும் அவர் கலந்துகொண்டிருந்தார். கைது செய்வதாக இருந்தால் நாடாளுமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றுக்கு வெளியிலோ வைத்து அவரை கைது செய்திருக்கலாம். ஆனால், நள்ளிரவில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி, பிடியாணை உத்தரவின்றி, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வந்திருக்கும் சிலர் அவரின் வீட்டை சோதனையிட்டு, வீட்டை உடைத்து அவரை கைது செய்ய முயற்சிப்பதாக அறியக்கிடைக்கின்றது.
ரிஷாட் பதியுதீனின் முகப்புத்தகத்திலிருந்து..