சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை இராஜினாமா செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகின்றது.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி சமிந்த விஜேசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த இரண்டு தடவையும் நாட்டில் கோவிட் அலை உருவாகியதை தடுக்க இந்த அரசாங்கம் தவறியதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது 03ஆவது அலையும் உருவெடுத்துள்ள நிலையில் இதிலும் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாகவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.