மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாகவும் கருதப்படும் பசில் ராஜபக்ஷவின் 70 வது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27). அவர் ஏப்ரல் 27, 1951 இல் பிறந்தார்.
2005 முதல் நாட்டில் ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதில் பெரும் பங்கு வகித்த நபராக பசில் ராஜபக்ஷ கருதப்படுகிறார்.
தனது சகோதரர்களை அரச தலைவர்களாக்க முயற்சித்த பசில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயாராகி வருகிறார்.
“மனிதர்கள் விழும்போது சிலர் பாதியிலேயே எழுந்து நிற்கிறார்கள். இன்னும் சிலர் முற்றிலுமாக எழுந்து நிற்கிறார்கள். மிகச் சிலரே வலுவானவர்களாக எழுந்து நிற்கிறார்கள். பசில் ரோஹன ராஜபக்ஷ போன்றோர் அத்தகையவர்கள்”என்று அட்டமஸ்ஸா ஒருமுறை எழுதினார்.