கொழும்பு போர்ட் சிட்டி வேலைத்திட்டத்தின் உத்தேச ஆணைக்குழுவுக்கான தலைவராக ஹான்ஸ் விஜேசூரிய நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
டயலொன் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிறுவனமாகிய ஆசியாட்டா நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரியாக இருந்துள்ள இவர், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார்.
இந்த நிலையிலேயே மேற்படி ஆணைக்குழுவின் தலைவராக இவரை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதேவேளை சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.