கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கல்முனையில் இடம் பெற்றுள்ளது.
மே மாதம் 4 ஆம் திகதி குறித்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதால் அதற்கான முன்கூட்டிய கலந்துரையாடல் இன்றைய தினம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குள் இடம்பெற்றுள்ளது
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன்மற்றும் கோ.கருணாகரம்,கட்சி உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.