மஹர படுகொலை சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!
மஹர சிறைச்சாலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் உரிமைகளை பறிக்க சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளன.பதினொரு பேரைக் கொலை செய்த மற்றும் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைத் தாக்குதலில் பலியானவர்களை பிரதிநிதித்துவப்படுத்த சட்டத்தரணிகளுக்கு முடியும் என வெலிசர நீதவான் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.