1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ராஜபக்சர்களின் எதிர்கால குடும்ப சக்தியை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் இருபதாம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருபதாம் திருத்தத்திற்கான வாக்கெடுப்பு இன்று இரவு (22) நடைபெற உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும், சட்டவிரோத தேக்கு மர  மோசடிக் குறித்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்துகொண்டிருந்த, இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இலங்கை வம்சாவளி, நோர்வே நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி பிரதேசத்தில்  உள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் பழங்கால இடிபாடுகளுடன் கூடிய சுமார் 100 ஏக்கர் அரச வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்த நிலையில், மீதமுள்ள வனப்பகுதிக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவதில் ஒருசந்தேக நபருக்கு பொலிஸார் உதவியதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும், சட்டத்தரணியுமான உதய பிரபாத் கமன்பிலவிடம்  விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தனி வெடிப்பு ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் தொடர்பில்  அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் ஊடாக வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தும் திறன் சுகாதார அதிகாரிகளுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

மரணதண்டனை விதிக்கப்பட்டவரான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமை தொடர்பில் சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

புகையிலை மற்றும் மதுபானம் காரணமாக இலங்கையில் தினமும் குறைந்தது 85 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கும் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், ”கால் போத்தல்” விற்பனையை ஒழிப்பது, இதற்கு ஒரு தீர்வாக அமையுமென தொடர்பில் முன்மொழிந்துள்ளார்.

வலிமைமிக்க ஐ.தே.க க்கு என்ன நடந்தது என்பது எமக்கு தெரியும் இது மொட்டுக் கட்சிக்கும் நடக்காது என்று கூற முடியாது என வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வனவள அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் வாக்களிக்காததால் தோல்வியடைந்த மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த நிரோஷன் பிரேமரத்ன மற்றும் மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த பத்ம உதயசாந்த ஆகிய இருவருக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கி நாடளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும் என்று  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை இளம் தலைமைத்துவத்தின் கீழ் ஒப்படைக்க இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.

சமகி ஜன பலவேகயவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இன்று (13) காலை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி