1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவும் இலங்கையின் பிரதமராக பணியாற்றும் திறமை கொண்டவர்கள் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளது.நாளை (30) காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 வைரஸ் காரணமாக மத்திய கிழக்கில் பணிபுரியும் 20,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள சுயாதீன முஸ்லிம் எழுத்தாளரை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு  விரைவில் கடன் நிவாரணம் வழங்குவதற்கான கடமைகளை நிறைவேற்றியுள்ளனர், ஆனால் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உருவாகியிருந்த நிலைமையை கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச அதிகாரிகளின் கடன் தவனை மற்றும் கடன் வட்டி இம்மாத சம்பளத்திலிருந்த அறவிடப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார். இது தொடர்பிலான சுற்று நிருபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தேச MCC ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் 480 மில்லியன் டொலரிலிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு பணமோ, செலவீனமோ வழங்கப்படவில்லையென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் கூறுகிறது.

பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.பிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (25) அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் 19 ன் போது பல சிரமங்களை சந்தித்த மேல் மாகாண செவிலியர்களுக்கான கொடுப்பனவுகளில் வெட்டு விழுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து இலங்கை செவிலியர் சங்கமும் முடிவு செய்துள்ளது.

ராஜினாமா செய்வதை விட்டு விட்டு உங்களது அறிவை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனிடம்  கேட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்நத காவலரொருவர்  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வௌிநாடுகளில் பணியாற்றிய 23 இலங்கை உழைப்பாளிகள் கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி