1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கங்கள் கட்சியின் தலைமையை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

லெபனான் மீட்பு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பெய்ரூட் துறைமுகம் அருகே நடந்த வெடிப்பில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் வாக்களிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அங்கு மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரை ஆசீர்வதித்தனர்.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக 22 மாவட்டங்களில் 12,985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.196 மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இதற்காக 7452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று பிற்பகல் பாதுக்கையில் பதிலளித்தார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் பிரதமர், அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து பணம் பெற்றமை தொடர்பிலான தகவலை நல்லாட்சி அரசாங்கத்தின் பலமிக்க முன்னாள் அமைச்சர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக, பல்கலைக்கழக அதிகாரிகளால் ஒரு தசாப்த கால கற்பித்தல் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் தலைவருக்கு சார்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இலங்கையின் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு மாத்திரமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

37 வருடங்களுக்கு முன்னர் 3,000ற்கும் மேற்பட்ட தமிழர்கள் அரச அனுசரணையுடன் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலை நினைவாக இணையவழி கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 07 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

சனச அபிவிருத்தி வங்கியின் நிர்வாகம் வங்கியை வேண்டுமென்றே நட்டமடையச் செய்வதாகவும், அதை எதிர்க்கும் தொழிற்சங்கத் தலைவர்களை பதவி நீக்கம் செய்யும் இழிவான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், நாட்டின் பிரதான வங்கிச் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்ட அரசாங்கம் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்களை கேலி செய்துள்ள பேராசிரியர் ஒருவர், சுகாதார சேவைகள் பணிப்பாளரை மீண்டும் க.பொ.த சாதாரண தர கணிதப் பாட பரீட்சைக்கு தோற்ற வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி