1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்நாட்டிற்கு வர வேண்டுமெனக் கேட்ட வெளிநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை உழைப்பாளிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சௌதி அரேபியாவிற்கு உழைப்பாளிகளை மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நேற்று (28) கொரோனாவினால் 8 பேர் இறந்துள்ளனர் . கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 107க அதிகரித்துள்ளது.

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளது நான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாது என பசில் ராஜபக்ச சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக பிரதமர் அபிய் அகமது அறிவித்துள்ளார் 

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள், வலுக்கட்டாயமாக பெறப்பட்டமைக் குறித்து பொலிஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், போதனா வைத்தியசாலைகளில் நிலவும் 89 விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில், அரசுக்கு நெருக்கமான வைத்திய சங்கம், பொது சேவை ஆணைக்குழு மீது குற்றம் சாட்டியுள்ளது.

அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிறைச்சாலை திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும், அதன் பண்பாடு தழுவிய விழுமியங்களோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் நிகழ்த்திய உரையில்

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி