தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பொதுச் சபையின் செயற்பாட்டாளர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சிகள் சார்பில் அதன் தலைவர் வேந்தன், பசுமை தேசிய இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்தா. புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையொப்பமிடப்பட்டனர்.
தமிழ் மக்கள் பொதுச் சபை சார்பில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.யோதிலிங்கம். அரசியல் விமர்சகர் நிலாந்தன், வசந்தராசா, ஆய்வாளர் யசீந்திரா உட்பட பலரும் கையொப்பமிட்டுள்ளனர்.