சீரற்ற காலநிலையால் 12, 289 பேர் பாதிப்பு : பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கு தடை
சீரற்ற காலநிலையால், இதுவரையில் 9 மாவட்டங்களில், 3037 குடும்பங்களைச் சேர்ந்த 12, 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூவர் உயிரிழந்ததுடன், நால்வர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 485 குடும்பங்களைச் சேர்ந்த 2374 பேர், 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹற்றன் – கொழும்பு மற்றும் ஹற்றன் – கண்டி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.