எஹலியகொட, உடுவக பிரதேசத்தில்
இன்று (27) மாலை ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் 8 வீடுகள் முற்றாக புதைந்து விட்டதாக எஹலியகொட பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து அப்பகுதியில் வசிக்கும் 48 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு உடுவக வித்யார்த்த வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எஹலிகொட பிரதேச செயலாளர் எஸ்.ஏ. தில்ருக் கூறினார்.