அம்பலாங்கொடை பிரதேசத்தில்
மலர்ச்சாலை உரிமையாளரை ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர் நேற்று (27) அம்பலாங்கொடை பொலிஸில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வட்டுகெதர பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர்.
சந்தேக நபர் மலர்சாலை உரிமையாளரின் உதவியாளராக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.