பாறுக் ஷிஹான்
இ.போ.ச பஸ் ஒன்று வீதியை
விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பயணிகளுடன் வெள்ளிக்கிழமை (28) இரவு அம்பாறை நோக்கிச் செல்லும் போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி பஸ்ஸுடன் மோதி விபத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக பஸ்ஸின் சாரதி அதனை திடீரென நிறுத்த முற்பட்டவேளை அருகில் இருந்த நீர் வாய்க்காலுக்குள் விலகி சரிந்து பஸ் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பஸ் நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் கல்முனை பகுதியில் இருந்து வந்த 1990 சுவ செரிய அம்புலன்ஸ் ஊடாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விபத்து இடம்பெற்ற அம்பாறை - வங்களாவடி பிரதான வீதிக்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.