ஐக்கிய தேசியக் கட்சியின்
செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோதா ரங்கே பண்டார வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் .
இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது .