'தமிழன்' எமது பத்திரிகையின்
4 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு நேற்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அகவை நிறைவு விழா இனிதே நடந்தேறியது.
இந்த விழா வெற்றிகரமாக நடைபெற்றமை தொடர்பில் தமிழன் பத்திரிகை ஆசிரியர் சிவா ராமசாமி தெரிவித்துள்ளதாவது,
எமது அன்பான வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்திற்கு சமூகமளித்து , நிகழ்வின் இறுதிவரை நின்ற எனது அன்பிற்கும் நேசத்திற்கும் உரிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி..
வாசகர்கள் , விளம்பரதாரர்கள் , நண்பர்கள் , இதர ஊடக உறவுகள் , கல்விமான்கள் , அரசியல்வாதிகள் என்று பலரும் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று வருகை தந்திருந்தனர்.
'தமிழன்' பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது எங்களில் சந்தேகம் இருந்தது. ஆனால் எமது செயற்பாடுகள் அந்த சந்தேகங்களை களைந்தன.தமிழ் , முஸ்லிம் சமூகங்களின் குரலாகவும் அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் சக்தியாகவும் நாங்கள் இருப்போம். நண்பர்கள் என்பதற்காகவோ நெருங்கியவர்கள் என்பதற்காகவோ செய்திகளில் ,எழுத்துகளில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை.
'தமிழன்'விருதுகளை பெற்றோருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதேசமயம் கல்விப்பணிக்கான எமது திட்டத்தில் தமிழ் மொழியில் விசேட சித்தி பெற்ற சாதாரண தர வகுப்பு மாணவிக்கு மடிக்கணனி ஒன்றையும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாவிடைப்பொதியையும் இலவசமாக வழங்கினோம். அவர்களுக்கும் வாழ்த்துகள் .. பலரும் விடுத்த வேண்டுகோளின்படி ,அடுத்த வருடம் 'தமிழன்' விருதுகள் விளையாட்டுத்துறை உட்பட மேலும் சில துறைகளுக்கு விஸ்தரிக்கப்படும்.
சமூக ஊடகத்திலும் , பத்திரிகையிலும் நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்த அனைவரிடமும் தனியாக உரையாட முடியாமல் போனாலும் என்னை மதித்து வருகை தந்த உங்களின் முகங்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன்.
இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒத்துழைத்த எமது முகாமைத்துவம் , எமது ஆசிரிய பீட உறுப்பினர்களின் அர்ப்பணிப்பை இங்கே பாராட்டியாக வேண்டும்.
அதுமட்டுமல்ல எனக்காக தூர இடங்களில் இருந்து பயணித்து வந்த அன்பார்ந்த உறவுகளை என்றும் மனதில் வைத்திருக்க கடப்பட்டுள்ளேன்.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை.. உங்களில் ஒருவனாக நான் இருக்க வேண்டுமென்பதையே இந்த நேசப்பிணைப்பு சுட்டி நிற்கின்றது.நிற்பேன்.