படகில் மீன்பிடிக்கச் சென்ற
மீனவர்கள் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தலிலிருந்த மதுபானத்தை அருந்தியதில் இரு மீனவர்கள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தற்போது மற்றுமொரு மீன்பிடி படகு மூலம் இன்று (29) கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆழ்கடலில் 317 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே.நயனகாந்த என்ற 42 வயதுடைய மீனவராவார்