இலங்கைக்கு வருகை தந்த
25 வயதான இஸ்ரேல் நாட்டு யுவதி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்த இஸ்ரேலிய யுவதி ச திருகோணமலையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.