எச்.எம்.எம்.பர்ஸான்
நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற
லொறி ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புணானை பெட்டிக்கலோ கெம்பஸுக்கு முன்பாக இன்று (29) இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பகுதியிலிருந்து பொலன்னறுவை நோக்கி நெல் மூடைகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு வழி விடும்போது லொறி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
விபத்தில் லொறிக்கு சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் பயணித்த சாரதியும் நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.