கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட
போத்தலில் இருந்து திரவத்தை அருந்தி சுகவீனமடைந்த திவார படகில் பயணித்த ஒருவர் இன்று (01) காலை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் கொடியேற்றப்பட்ட வர்த்தகக் கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட சுகவீனமுற்ற நபர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் பரிசோதனைகக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.