பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26ஆம் திகதியுடன் நிறைவடைந்ததால் சட்டமா அதிபர் பதவிவெற்றிடமாக இருந்தது.
இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.