1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களில்

ஒருவரான கலாநிதி சேனா யத்தேஹிகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பில் ருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்தில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த தடையை பிறப்பித்துள்ளனர்.

இந்த கோடீஸ்வர வர்த்தகர், கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு தான் சென்ற போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேக நபருக்கு பயணத்தடை விதித்ததுடன், சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறினால் அவரை கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி