பியகம, மல்வான பிரதேச வீடு
ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.