சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று 24.01.2021 காலை விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
கொவிட் 19 சவாலை எதிர்கொண்டு 9 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே நல்லுறவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாடாளுமன்றத்தை முறையாக தொடங்குவது குறித்து பிரதமர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.