கிட்டு பூங்காவின் முகப்பு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் கால தாமதமாகி வருகை தந்ததால் முற்றாக எரிந்துவிட்டது.
இந்தச் சம்பவம் பொது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்ட அடையாளச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது கிட்டு பூங்கா விற்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.