1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் அதிகரித்து வரும் நுண் கடன்களுக்கு எதிராக இன்று காலை மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ள கித்துள் கிராமத்தில் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களாக ஹிங்குராகொட பிரதேசத்தில் நுண்கடனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அடுத்து அவர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு சேர்ந்து கோப்பாவெளி, உறுகாமம், கித்துல் புல்லுமலை போன்ற பகுதியைச் சேர்ந்த பெண்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நுண் கடன்களை​உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1.jpg

2.jpg

3.jpg

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி