1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1,000 இராணுவ வீரர்கள் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று காலை, கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார சேவைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அமைச்சின் செயலாளர் அவை குறித்து பேசாதிருக்கும் நிலையில் அல்லது அவை குறித்து எதுவுமே அறியாதவராகக் காட்டிக் கொண்டிருக்கும் போது, சுகாதார அமைச்சரும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமரோ சுகாதார நிபுணர்களுக்கு அறிவிக்காமல் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பதாகவும், இவர்களுக்குத் தெரியாமல் ஜனாதிபதி முடிகள் எடுப்பதாகவும் நிறைவுகாண் மருத்துவத் தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் சுட்டிக்காட்டுகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிப்பதில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இன்று (05)ம் திகதி  அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்சின் இராணுவ விமான விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96-பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா தெரிவித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு மதுபான உற்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட மெண்டிஸ் நிறுவனம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை இதுவரை செலுத்தாததுடன், செலுத்தப்பட வேண்டிய 14 பில்லியன் வரியும் இதுவரை செலுத்தப்படவில்லையென செய்திகள் கூறுகின்றன.

இலங்கை காவல் நிலையங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் சமூக அமைப்பு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

முதலீட்டுத் திட்டத்தின் மூலம் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை வர்த்தகர்களுக்கு வழங்கும் விடயத்தை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மூன்று நாடுகளிடமிருந்து சுமார் 215 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியிடம் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணித் தொகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு அவசரமாக கடன் பெற்றுக்கொள்ள உள்ளது.

பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வரவழைப்பது அமைச்சர்களினதும் நாட்டினதும் அவசரநிலை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார், ஆனால் இதுவரை திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றும் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான தனிப்பட்ட திகதிகளை சிலர் பெயரிட்டுள்ளனர், ஆனால் மஹிந்த ராஜபக்ஷ வார இறுதி தேசிய செய்தித்தாளிடம், பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இது செல்லுபடியாகாது என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர்.பிரபல நடிகர் அமீர்கான் தனது லால் சிங் சதா படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிரான்ஸ்ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானங்களில் ஒன்று நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடலில் இறங்கியது.இந்த நிகழ்வின்போது விமானத்தில் இருவர் இருந்தனர். இவர்கள் இருவருமே அதன் விமானிகள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று, இன்று பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி