1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வடகொரியாவில் "மோசமான நிகழ்வு" ஏற்படக் காரணமான தவறுகளுக்காக மூத்த தலைவர்களையும் அதிகாரிகளையும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கடிந்து கொண்டிருக்கிறார். பலரை நீக்கியிருக்கிறார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் 6000 சிறுகதை எழுத்தாளர்களில் இலங்கையை சேர்ந்த ஒரு எழுத்தாளர் முதன் முறையாக சிறுகதைக்கான விருதை வென்றுள்ளார்.

இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பேய்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக விவசாயி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) காலை முதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இன்றும் (01) நாளையும் (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக குறித்த தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 12ம் திகதி அஹ்னாப் ஜசீமை நீதிமன்றத்திற்கு கொண்டுவரும்போது அவரது சட்டத்தரணிக்கு ஏன் அறிவிக்கவில்லையென்ற நீதிபதியின் கேள்விக்கு சட்டத்தரணிக்கு அறிவிக்குமாறு ஜசீம் கோரவில்லையென காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு நாளைய தினத்துக்குள் தீர்வுகளை முன்வைக்காவிட்டால் நாடு பூராகவும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல புதுமைகளை, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதில் வெற்றியும் கண்டவர் கமலஹாசன். உலக நாயகன் என ரசிகர்களாலும்,  திரையுலகினராலும் புகழப்படுபவர் கமல். அப்படிப்பட்ட கமலின் ஓவியத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த மாணவி நேஹா பாத்திமா.கோடுகள், புள்ளிகள், வளைவுகள் என எதையும் பயன்படுத்தாமல் இந்த ஓவியத்தை அவர் வரைந்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பேச்சளவில் மாத்திரம் செயற்படுத்தப்படுகின்றன. அம்பாந்தோட்டை மாவட்டத்தை சீன காலணித்துவத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியா திஸ்ஸமஹராம வாவி புனரமைப்பு ஊடாக முன்னெடுக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என தேசிய பிக்கு முன்னணியின் பொதுச்செயலாளர் வகமுல்லே உதித தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஒற்றையாட்சி முறைமையை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்தார்.

பெற்றோல் விலையேற்றம், தமிழ் மக்களின் பிரச்சினை உள்ளிட்ட பலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில், இன்று (29) காலை, கண்டன சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ,நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது பலீல் மர்ஜான் தனது ஆசனத்தை பசிலுக்காக அர்ப்பணிக்கவுள்ளதாக உள்ளூர் அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொத்துவிலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் படையினரை பயன்படுத்துவது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்துக்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி