1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் பின்னர் நேற்று (30) நாள் பூராவும் கைதிகளுக்கு உணவு வழங்கப்படவில்லையென செய்திகள் கூறுகின்றன. 

இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறைச் செயற்பாடுகள், காலத்திற்குக் காலம் வலுப்பெற்றுவருகின்றன. இந் நிலையில் இலங்கை அரசின் இத்தகைய தமிழர்கள்மீதான அடக்குமுறைச் செயற்பாடுகளை இன்னும் எவ்வளவு காலத்திற்கு சர்வதேசம் வேடிக்கை பார்க்கப்போகின்றது. இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விடயத்தை "தவறான செய்தி புனைகதை" என கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் காடழிப்பைத் தடுக்க விமானங்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்ப முயல்வதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளதால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில் இன்றைய வழக்கில் அது சாதகமாக இருக்கும் என தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஸாத் சாலி தெரிவித்தார். தமது உறவினர்களின் சடலங்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் கையெழுத்திடாமல் மறுத்து வரும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் பலாத்காரமாக கையெழுத்து பெற பொலிஸார் முயல்வதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் தருணத்தில் இந்த சம்பவம் மேற்குலகம் மற்றும் இஸ்ரேலுடனான மோதலை வலுக்கச் செய்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்நாட்டிற்கு வர வேண்டுமெனக் கேட்ட வெளிநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை உழைப்பாளிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சௌதி அரேபியாவிற்கு உழைப்பாளிகளை மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நேற்று (28) கொரோனாவினால் 8 பேர் இறந்துள்ளனர் . கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 107க அதிகரித்துள்ளது.

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளது நான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாது என பசில் ராஜபக்ச சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக பிரதமர் அபிய் அகமது அறிவித்துள்ளார் 

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியங்களாக முன்வைக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள், வலுக்கட்டாயமாக பெறப்பட்டமைக் குறித்து பொலிஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், போதனா வைத்தியசாலைகளில் நிலவும் 89 விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில், அரசுக்கு நெருக்கமான வைத்திய சங்கம், பொது சேவை ஆணைக்குழு மீது குற்றம் சாட்டியுள்ளது.

அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமைத் தொடர்பில் காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி