1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலகளவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனை எட்டியது மற்றும் இறப்பு எண்ணிக்கை 200,000 ஐ தாண்டியது.

ஏப்ரல் 30 க்கு பிறகு, நாட்டில் நெருக்கடி மற்றும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் மக்கள் மத்தியில்அரசாங்க செலவின் ஒப்புதல்களை அரசியலமைப்பு ரீதியாக அமுல்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள கடுமையான நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான திட்டங்களை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சட்டத்தை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை மாத்திரம் செய்து, பொலிஸார் சில குழுக்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் படி, பழைய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, ​​பொருளாதாரத்தை பராமரிக்க இலங்கை அரசு கடன் வாங்க முடியாது என்பது தெளிவாகிறது. எனஜனாதிபதியின் செயலாளர் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கும் நோக்கில், விமான சீட்டுகளுக்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலைக்குள்ளான, அரச புலமைப்பரிசில் பெறும் அனைத்து மாணவர்களினதும் பயண செலவுகளையும் அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டுமென, இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

அரச சேவைகள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் முருதொட்டுவே ஆனந்த தேரர் கூறுகையில் கொரோனா கட்டுப்படுத்தும் திட்டம் குழப்பத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புப் படையினரால் பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்துவது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

குறுகிய காலத்தில் அதிகளவான கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை, விசேட நிபுணர்களின் அறிவுறுத்தல்களை புறக்கணித்தமையின் விளைவு என கொவிட் 19 சுகாதார போராட்ட முன்னணி, பாதுகாப்பு படையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது  இப்போது நாடும் நாட்டு மக்களும் பெரும் ஆபத்தில் உள்ளனர் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறுகிறார்

கொரோனா வைரஸ் காரணமாக வெலிசர கடற்படை முகாம் மற்றும் சீதுவ சிறப்புப் படை முகாம் மூடப்பட்டிருப்பதை அரசாங்கம் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு பி.சி.ஆர் சோதனையை 'தேசிய நிறுவனங்கள்' வலுவாக மேம்படுத்துகின்றன அரசாங்கத்துடன் இணைந்த தனியார் ஊடகங்களும் சுகாதார அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையில் வர வர மோசமடைந்துவரும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25), கதிர்காம மகா தேவலாயம் உள்ளிட்ட பிற கோவில்களுக்குச் சென்று கடவுளிடம் உதவி கோரியுள்ளார்.

எலிக் காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரியொருவர் இறந்துள்ளார்.

பிரதமரின் அலுவலகம் பிரதமரின் வதிவிடம் ,மற்றும் தங்கல்லயில் உள்ள கார்ல்டன் இல்லம் ஆகிய இடங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள கடற்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி