கொவிட் 19 -சுகாதாரத் துறையின் ஆலோசனைகளை அரசாங்கம் மீறுகிறது!
நாடுபூராவும் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் திருத்தி, எதிர்வரும் வாரத்திலிருந்து 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.