தேர்தல் வன்முறைகள்: 67 பேர் கைது, 6 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிடத்தக்க குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த வியாழன் வரை, ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறிய 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் 99 முறைப்பாடுகள் கிரிமினல் குற்றங்களுடன் தொடர்புடையவை என்றும் நிஹால் தல்துவ கூறினார்.
மேலும், சந்தேகத்துக்கிடமான 6 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.