கிளிநொச்சி இரணைதீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளி கிழமை காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அத்தியாவசிய, மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிதி அமைச்சு பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில், கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பிலான விவாதம் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சமாளிக்க வேலை நாட்களை வாரத்திற்கு நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி யோசனை முன்வைத்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் 2022ம் ஆண்டுக்குரிய வருடாந்த தேசிய மாநாடு முல்லைத்தீவில் 20.02.2022அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படுமா என்பதற்கான சாத்தியமே தென்படாத நிலையே காணப்படுவதாக “ரட்டே ரால” அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஞ்சனின் விடுதலைக்காக ஜெனீவா செல்லும் இரண்டு சகாக்கள்!ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் 2022 பெப்ரவரி 28 திங்கட்கிழமை ஜெனீவா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.
உலகின் பலமிக்க இராணுவ படைகளில் ஒன்றான ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்ரோஷமாக தாக்கி வரும் நிலையில் தம்மை போருக்கு தூண்டி நாடுகள் மௌனம் காப்பதையிட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனை வெளியிட்டிருந்தார்.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான லஞ்ச ஊழல் தொடர்பான வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.