1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கலாவெவ தேசிய வனப் பகுதியில்

பாரியளவிலான கசிப்புக் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெக்கிராவ பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழுவொன்று ஒலம்பேவ கிராமத்தை சுற்றிவளைத்து சட்டவிரோத மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த இருவரை கைது செய்துள்ளனர்
 
இதன்போது, ​​அங்கிருந்த மேலும் இரு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதையடுத்து, பொலிஸார் விரைந்து சென்று சந்தேக நபர்களை கைது செய்த போது, ​​அருகில் இருந்த மரமொன்றில் இருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களைக்  குளவிகள் கொட்டியுள்ளன. 
 
கெக்கிராவ பொலிஸில் கடமையாற்றும் 7 சார்ஜன்ட்கள் காயமடைந்துள்ளனர். 
 
இது தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பெருமளவிலான கசிப்பு மற்றும்  கோடாவைக் கைப்பற்றியுள்ளனர்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி