கிண்ணியா செய்தியாளர்
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு ஹபாயா அணிந்தும் பெண் வேடமிட்டும் தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
கசம்பவத்தில் தாக்குதல் நடாத்திய 38 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான தாய் வயது (54) ,மகள் வயது (31) இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும் மகள் கந்தளாய் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈச்ச நகர் பகுதியில் குறித்த பெண் தன்னிடம் கடனுக்கு பணம் வாங்கிய நபரிடம் அதனை மீளப் பெறுவதற்காக அவரது கடைக்கு சென்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அந்த நபர் கத்திக் குத்து தாக்குதலை நடத்தி விட்டு தப்புவதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே தப்பித்துச் செல்ல முயற்சித்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்