தற்போது அரச நிறைவேற்று தர
சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவை ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் சேவைக்காலத்தின் அடிப்படையில் 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் அனைத்து அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பொதுவான சம்பள கட்டமைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிறைவேற்று தர உத்தியோகத்தர்களை பாதித்துள்ள தொழில்சார் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினாலேயே இது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிதி அமைச்சின் செயலாளர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர்
இந்தக் குழுவின் அறிக்கை பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது