எதிர்வரும் 2ஆம் திகதி
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வர் ஆளும் கட்சியில் அமர தயாராக உள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரம் ஒன்று தெரிவிக்கிறது.
நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். அந்த அறிக்கையின் பிரகாரம் ஜனாதிபதியின் அறிக்கை மீதான விவாதத்தையும் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.