வெலிகம பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து அப்லடொக்ஸீன் என்ற புற்றுநோயை உண்டாக்கும் ஒரு தொகை பருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பருப்பில் புற்றுநோயை உண்டாக்கும் அப்லடொக்ஸின் அடங்கியிருப்பது ஆய்வறிக்கையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக வெலிகம பிரதான பொதுச் சுகாதார பரிசோதகர் குறிப்பிடுகிறார்.
நுகர்வாளரொருவரின் முறைப்பாட்டிற்கேற்ப குறித்த கூட்டுறவுச் சங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3000 கிலோ பருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், பயன்படுத்த முடியாத காலாவதியான பருப்பு என்பதும் தெரிய வந்துள்ளது.