1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை பணிக்கமர்த்துவதை மட்டுப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றது.

 

கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்ஸா நோய் வேகமாக பரவி வருவதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலம் வரை இன்புளுவன்ஸா நோய் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

 

ஏப்ரல் மாதத்தில் 11 நோயாளர்களும், மே மாதத்தில் 6 நோயாளர்களும், ஜுன் மாதத்தில் 103 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நோய் தாக்கத்தினால் அதிகளவில் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுகேகொட-தெல்கந்த சந்தியில் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹைலெவல் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation (DFC) இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத வாக்காளர்கள் இன்று முதல் தமது பெயர்களை பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி’ என சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நாளை மறுதினம் முதல் நிறுத்தப்படவுள்ளன.

நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் தொடர்பான நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான  உதவியை பெற்றுக் கொள்வதற்காக ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி