1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஸ இராஜினாமா செய்தமையினால், வெற்றிடமான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பிரபல வர்த்தகரும் அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளருமான தம்மிக்க பெரேரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இது அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தினமான ஜூன் 14 ஆம் திகதி ஏற்கனவே அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் தலையிட்டு இந்தியாவில் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளது.

“இலங்கையில் நடந்த போர் காரணமாக உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். எனவே, இங்கிருந்து இந்தியா சென்றவர்களை சிறப்பு முகாம்களில் தங்க வைப்பதை ஏற்க முடியாது. தமிழக முதலமைச்சர் தலையிட்டு அவர்களை விடுவிக்கவும், அவர்கள் விரும்பினால் இலங்கைக்கு திரும்புவதற்கும் அல்லது அவர்கள் விரும்பவில்லை என்றால் இந்தியாவில் வாழவும் வசதி செய்து கொடுக்க வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் யாழ் குடாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து தமிழக அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.

குடிவரவு சட்டங்களை மீறி இந்தியாவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 104 இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி முகாமில் உள்ள 6 தமிழ் அகதிகள் கடந்த 20ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம் இருந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, தமிழ் அகதிகள் சிலர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 17 பேரை கடந்த 6ம் திகதி முகாம் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏனைய அகதிகள் முகாமில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள மக்களுக்கு உணவளித்து உதவிய தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், தமிழக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி