1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியப் பிரதமர் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இலங்கை நிதியமைச்சர் டெல்லி செல்லவுள்ளார்.

சர்வதேச சாசனத்தில் கையொப்பமிட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இயற்கை ஆற்றுக் கழிமுகமாக வளரும் சுற்றுச்சூழல் அமைப்பில் சட்டவிரோத மணல் அகழ்விற்கான அனுமதிகளை வழங்கியுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் மீது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் என்பனவற்றினால் விற்பனை செய்யப்படும் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து, தற்போது ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில்,

சிபேட்கோ நிறுவனம் தமது எரிபொருள் விலையை நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

மருதானையிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டவர்களை எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த புதன் கிழமை (09) அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில்,
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ளதாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றதாக கூறப்படுகின்றது.

கோதுமை மாவின் விலையை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கொவிட் தொற்று நோய் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (10) வெளியிட்டது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து போலி இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11) ஒத்திவைத்தது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் விலை உயரலாம் என்ற அச்சத்தில் பல நுகர்வோர் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியிருந்த நிலையில்,
‘உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் அளவு குறைவடையுமே தவிர எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது‘ என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.


கருக்கலைப்புக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது.
இதேவேளை, இலங்கையில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாய் இறப்புக்கான மூன்றாவது பொதுவான காரணியாகக் பாதுகாப்பற்ற கருக் கலைப்பு அமைகிறது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களின் பற்றாக்குறையினால் பாதிப்படைந்து இருக்கவும் மக்களின் அழுகுரல்கள் எம்மை வருத்தமடைய செய்துள்ளதாக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி