1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

(முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இறந்து இன்றுடன் (24) இரண்டு மாதங்கள் ஆகின்றன.)

சிரேஸ்ட ஊடக விக்டர் இவான் கூறுகையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் பார்வை "முற்றிலும் ஜனநாயகமற்றது மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் அரசியலமைப்பு மரபுகள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது."

சட்டங்களை தயாரிக்கும் பாராளுமன்றத்திற்கு தான் மொன்டிசோரியிலிருந்து வரவில்லை எனவும், வேறு இடத்தில் தயாரித்த சட்டத்தை முன்வைக்கும் போது சிக்னல் கம்பங்களைப் போல கை தூக்க தயாரில்லை எனவும் கல்வி மறுசீரமைப்பும் மற்றும் திறந்த பல்கலைக் கழக ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று (23) பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (கோப்) அறிக்கை சம்பந்தமான சபை ஒத்திவைக்கப்படும் வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

துருக்கிஅதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளின் தூதர்களை வரவேற்கப்படாத நபர்களாக (Persona non grata) அறிவிக்க உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை (25) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) தலைமையில், ஹப்புத்தளை நகரில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பன்னாட்டு எரிபொருள் சந்தையின் நிலைத்தன்மையை பாதிக்காமல் தங்கள் இலக்கை எட்டுவோம் என்கிறார் முகமது பின் சல்மான்.

பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவரின் உடல் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார்.

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் வரும் மரக்கறிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன (Christy Wijeratne) தெரிவித்துள்ளார்.

விவசாயிகளும் நாட்டுமக்களும் வீதிகளில் இறங்கிப்போராட ஆரம்பித்தால், பாரிய கலவரங்கள் வெடித்து இரத்த ஆறு ஓடக்கூடும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய(Karu jayasooriya)எச்சரித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் பெரும்பான்மையின மக்களைத் திட்டமிட்டு குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து குறித்த இடத்துக்கு இன்று (21) விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பொதுமக்களும், தமது கண்டனத்தைத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டீசல் இல்லாத காரணத்தினாலேயே ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

கோட்டா(Gotapaya Rajapaksa), மகிந்த(Mahinda Rajapaksa) தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் இலங்கை மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று   எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி